Friday 30 October 2015

பனிமுறிந்த நாட்கள்


விடியலின் நட்சத்திரங்கள்
ஏளனம் செய்ய நான் 
நடக்கும் தெரு 
எனக்காய் விரிந்து சென்றது

பொழுது
இருளைச் சமைத்து விடியலுக்காய்
பரிமாற
வண்டின் வரவறிந்து
பூக்கள் கனத்த கிளைகள்
காற்றில் புணர்ந்தது

சொட்டும் பனித்துளியில்
சோம்பல் முறிக்கும் இலைகளில் ஊடே
ஒளி
தட்டி நின்றது வாசல் கதவை

பனிமுறிந்த நாட்களில்
விடியலின் வாழ்வு
தூக்கக் கலக்கத்தில் பொழுதை வரவேற்க
இருள்குறைந்த நாளில்
வலியாகப்பட்டது
விடிவு
ப.பார்தீ

No comments:

Post a Comment