ஏளனம் செய்ய நான்
நடக்கும் தெரு
எனக்காய் விரிந்து சென்றது
பொழுது
இருளைச் சமைத்து விடியலுக்காய்
பரிமாற
வண்டின் வரவறிந்து
பூக்கள் கனத்த கிளைகள்
காற்றில் புணர்ந்தது
சொட்டும் பனித்துளியில்
சோம்பல் முறிக்கும் இலைகளில் ஊடே
ஒளி
தட்டி நின்றது வாசல் கதவை
பனிமுறிந்த நாட்களில்
விடியலின் வாழ்வு
தூக்கக் கலக்கத்தில் பொழுதை வரவேற்க
இருள்குறைந்த நாளில்
வலியாகப்பட்டது
விடிவு
ப.பார்தீ
No comments:
Post a Comment