Sunday 17 June 2012
வெட்டாச் சுரக்கும்
ஞாபகங்களின் நினைவகளால்
என் கண்கள்
மீண்டும் ஒர் மழைக் காலத்தில்
புதைந்தது
எத்தனை முறை தான் எச்சரிப்பது
என் மனதிற்கு
உருக் கொடுக்காதே என்று
Saturday 16 June 2012
அதிசய வாசலில்
உன்னதமான
உலக அதிசய கோபுரத்தின்
அடிவாரத்தில் இருந்து
உன்னை தொடும்
தூரம் வந்தும்
தொடமுடியாமல் தவிக்கும்
கரங்களின் சொந்தக்காரன்
அதோபார்
அதிசயக்கோபுரம்
ஆகாயம் தொடும் உயரம்
அழகை இரசிக்க ஆயிரக்கணக்கில் மக்கள்
Thursday 7 June 2012
அவள்
அதோ பார்
நேற்று என்னோடு இருந்தவன்
இன்று அவளோடு இருக்கிறான்
நேற்று
என் உதட்டில் தேன் பருகியவன்
இன்று அவள் உதட்டிலும் தேடுகிறான்
Wednesday 6 June 2012
அடையாளம்
அந்த தேசத்தை விட்டு
பிரிக்க முடியாத நீங்கள்
எங்கிருக்கிறீர்கள்
ஓய்வும் விடுதலையும்
மனிதனுக்கு தேவை என்றால்
நீங்கள் மனிதன் அல்லவே
நீங்கள் வைத்திருந்த உறுதியும்
நம்பிக்கையும்
எங்களுக்கு சொல்லித் தாருங்கள்
Friday 1 June 2012
தாயாகிய அவள்
கனவுகளில் கரையும்
பெண்மைக்குத்தான் தெரியும்
அந்த மார்பின்
சுமைகளின் வலி
திங்கள் ஒருமுறை
சிதறும் விதைகளில்
எழாதா ஓர் விருச்சம்
என்ற ஏக்கம்
Subscribe to:
Posts (Atom)