Thursday 5 December 2013

அலங்காரம்


அவளை சந்திக்க முடியாத இரவு
அவனுக்கு வேதனையானது

அந்த இரவு அவனுக்கு
நீண்டு கொண்டே போனது

நட்சதிரம் நிலவொளி எல்லாம்
இருண்ட கண்டமானது

விளக்கு


உளைத்துக் களைத்து ஓய்வுக்குச் செல்கிறான் சூரியன்
அதன் தடிப்பில் மெளப்பொழுதின் இரசனைகளைக் காவிக்கொண்டு தொன்றலும் தீண்டத்தொடங்கியது
அப்போதுதான் அவள் வருகை

பூவே வெட்கமா?


மலர்கலே மன்னித்து விடுங்கள்
உங்களை பறித்து
என் காதலிக்கு பரிசளிக்க விரும்பவில்லை

நாளை அழியும் நீங்கள்
அவளின் பிரிவைத் தாங்க மாட்டீர்கள்

உயிருக்கு


பூவுக்குப் புரியாது
ஏந்திநின்ற காப்பின் பயன்
நேற்றைக்கு என் நினைவும்
பூவின் ஒப்பனையே

புதைகுழி இராகம்



இதோ 
எங்கள் கைகளில்
கொதிநீரும்
சீழும் உள்ளது 
இதை 
அவர்கள் சுவைக்கட்டும்

Thursday 24 October 2013

எனது தாயகம்


என் தாயகம் 
அதுவே எனது தாய்மடி
எனது காதலின் தேசம்
குருதியின் ஓட்டம்
உள்ளக் குமுறல்

அடக்குமுறைக்கெதிராக கிளர்ந்ததேசம்
அதிகாரத்தின் சட்டைகளை கிழித்ததேசம்
அகில உலகையும் ஆட்டிய தேசம்

Tuesday 15 October 2013

அவர்கள்


காலத்தால் சுருங்கியவர்கள்
கதைகளைக்
கேட்க வெறுக்காதீர்

அவர்கள்
நிழலின் பின் தவிக்கும்
ஒளிக்கீற்றுக்கள்

Sunday 6 October 2013

சாடை


கரையா பொழுதிலே
கவிதையும் வானமும்
நிலவுக்கு முத்தமிட
தாமரையின் மேலமர்ந்து
தாலாட்டுப் பாடிஎழ

மலை ஒன்றின் உச்சியதாய்
நீர் வீழ்ச்சி சல சலத்து
மௌனத் திரை உடைந்து
தாய் மார்பாய்
பால் சுரக்க

Monday 24 June 2013

நினைவில் பூத்த அல்லி


அந்திவானம் கறுத்திருக்கு
அடைமழையும் காத்திருக்கு
நெஞ்சுக்குள்ள பூத்த அல்லி
கரை தடவக் காத்திருக்கு

நிலவுக்கு தூது செல்ல
தென்றலும் தவமிருக்கு
நெஞ்சுக்குள்ள அவள் நினைவோ
நீரூற்றாய் வழிந்திருக்கு

விலக்கல்ல நான்


தெட்டு விட 
எத்தனித்துக் கொண்டே இருக்கின்றேன்
ஏனோ முற்றுகையிட முடியாத 
எண்ணம் எனக்குள்

தட்டித் தட்டி
பாளையின் பயனை அருந்தியபோது
வலிக்கும் சுகத்திற்கும் இடையான
இரட்டை தன்மையில்
எண்ணத்தை விழிக்கின்றேன்

உளைப்புக்கும் வறுமைக்கும் இடையில்
ஒற்றுமையைத் தேடி 
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும் இடையில்
மரணம் ஊஞ்சல் ஆடுகின்றது

தனிமை கரைத்த பொழுது


மேகம் கருக்கும் நேரம் பெண்நே
மின்னல் ஒழிரக்கண்டேன்
கூந்தல் மறைவில் நின்று கண்நே
வானம் கரையக்கண்டேன்

கலங்கிப்பின் தெளியும்


எல்லாவற்றைவும் மறந்துவிட்டாயா?

பார்க்கப்போனால் மொளனமான இந்த உலகத்தில்
நமக்குள் இருக்கும் காற்று 
ஆத்மாத்தமாக நம்மை இயக்குதென்பேன்

நமது இதயங்கள் என்றும் 
சச்சரவிட்டுக் கொண்டதில்லை
நமது எண்ணங்களைத் தவிர

எண்ணங்கள் அவ்வப்போது
இங்கிருந்து பொறுக்கி
கற்பிக்கப்பட்டவையே என்பேன்

Tuesday 7 May 2013

விடிவே கனவு தரும்


அடுத்த இலையுதிர்காலம்
தெற்கே வரவேண்டும் 
என்றுதான் விரும்புகிறேன்

ஆசையின் பிடியில்
அறியாமையின் போறில்
எங்கள் வீட்டு முற்றத்தை மட்டும் 
எத்தனை தடவை நாங்கள் சுத்தம்செய்வது


Tuesday 30 April 2013

மேகம் கொண்ற பொழுது

எனக்கொரு முகவரி தேடி
இரவினைப் புரவிகளாக்கி
சாட்டையில் புறத்தினை தோய்து
தனிமையில் சொர்ப்பணம் கொண் (ஆள்)



இருதயம் துடித்திடும் போது
என் கணம் நீண்டிடும்போது
விடத்துடன் நாகத்தை தேடி
விடை கொடு உடலிம் உயிரே

Tuesday 23 April 2013

ஊர்




ஆடி மழை பெய்திருக்கு
தேடிப் புல் முழைத்திருக்கு
ஏரு மேலே சேறு பூச
எங்கிருக்கான் விவசாயி

கட்கடங்கள் நிறையூரில்
கணணிக்குள்லே உறவுதேடி
காலத்தைத் தவறவிட்டு
கலங்க போரான் விவசாயி


எத்திசை ஈர்ப்பு


டிக் டிக் டிக்
காலக் கனி இதழில்
தேன் கழிக்க அளி
தூக்கத் தொலைதலினை
காத்தல் ஆக்கியதே

விண் கருக்கலுர
வன் புனர்ச்சி கொழும்
கண் மறுத்த வளி
தன் உணர்ச்சி புக -சித்தம்
கலங்கியதே

Friday 12 April 2013

ஆராரோ ஆரிவரோ



ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ

நீர் ஆளும் பூமியிலே  வந்துதித்த நித்திலமே
நீல வான் வெளியில் ஓளி கொடுக்கும் சூரியனே

அழகோவியம்


ஒரு அழகோவியம் உயிரானதே
அதன் பார்வையில் என் உயிர் போகுதோ
இது நாள்வரை தவம் செய்ததை
இமை கொண்றதே இதுதான்விதி

வலி என்பதா சுகம் என்பதா
தெலைதூரத்தில் உந்தன் குரல்
கரைகின்றதே காதல்மனம்
முகம்பார்க்கவா உயிர் நோகிறேன்

வரும் காற்றிலே உன்வாசனை
எடுத்தே அன்பே உயிர்வாழ்கிறேன்
தவம் செய்கிறேன் எனைக் கானவே
எழில் கொஞ்சுதே உந்தன்முகம்

மலர் பாதத்தால் மண் தொட்டதால்
பூ-வனம்மானதே பாலைவனம்
நிழல் கொள்ள நான் திரியாகிறேன்
இது போதுமே உயிர்வாழுமே
ப.பார்தீ

எங்கள் மரணங்கள்


அவர்கள் முகங்கள் கிழிந்து
சாட்சிகள் போராளியாக்கப்படும்போது 
அதன் 
பூகம்பத்தில் இருந்து
புதிய தேசத்தின் பரிநாமம் பிறப்பொடுக்கும்


விழிப்பு


உலகில் ஒரு புது விழிப்பு
தூக்கக் கலக்கத்தை போக்குவதான விழிப்பு
செலவின் எச்சங்களுக்கு 
இலாபத்தின் சேர்க்கையின் விழிப்பு

முன்பு பசுமையாக இருந்த வயல்கலும்
வைகரைப்பொழுதின்
வரவைக் கொண்டாடிய சோலைகலும்

Friday 22 March 2013

தொலைந்த மந்தைகள்



நாட்டைபற்றி எனக்கு
என்ன கவலை
நீதி கிடைத்தால் என்ன
நிலம் அழிந்தால் என்ன

நான் வேற்றுக் கிரகவாசியா
இல்லை
வெளிநாட்டில் குடிபுகுந்த
ஈழத்து தமிழன்

அந்தம் இனியில்லை



மூடு பனி இரவில்
மூக்காடு செப்பனிட்டு
நீரில் அல்லிபோல
நெஞ்சுக்குள் பூத்த மலர்

ஓலைக் கூறை இடை
ஒழுகும் நீரினைப்போல்
காலத் தேவையதாய்
கண்ணுக்கள் பதிசெய்ய

Tuesday 19 March 2013

வதனம் என் வசந்தம்



இரவின் தனிமையில்
தூங்கிக்கிடைக்கும்
நட்சத்திரங்களை
மேகக்கூட்டம் மூடத்தொடங்கி விட்டது

மின்னல் ஒளியில்
பொழுது புலர்ந்விடாதா என
பூமியில் மொட்டுக்கள்
ஏங்கித்துடிக்கின்றது

Tuesday 26 February 2013

அழியும், ஆகும்



பிரிவே பிரபஞ்சத்தில்
பிழந்து கிடக்கும்
எண்ணற்ற வடிவங்கள்

இரவின் தனிமையில்
விழித்துக்கிடக்கும் நட்சத்திரம்
ஒவ்வொன்றும் அதற்குச்சாட்சி

அந்தப்பக்கம் கிழிஞ்சு போச்சு



சில ஆண்டுகளுக்குமுன்
வேந்தனின் அரியனைக்கு
விசிரிய சாமரம்

விழாகாலச் சிறுவரின்
கள்ளன் காவல்த்துறை
விளையாட்டாக

ஒழியச் சொல்லுவாராம்
ஒழிஞ்சத தேடியும்
பிடிப்பாராம்

என்ன இலாபம்
என்ன நட்டம்
கணக்கிலயும் புலியாம்

போகட்டும் போகட்டும்
போனது பயங்கரம்
என்பாராம்

நாளைக்கு அவர் வீட்ட
செங்கொடியன் கிட்டிடா
சினைச்சேதம் ஆகிடுமாம்

நீதிக்கு கண்ணிருக்காம்,,,,
பாவம்
அது நிறக்குருடு ஆகிட்டடோ?

ஒப்பாரி கேக்கல்லயாம்
சப்பானி ஆகிட்டாறோ
தப்பா நினைக்காதங்க
அவர் அப்பாவும் அப்படிதான்

அரசியல் விளையாட்டில்
அம்மாவும் அப்படிதான்....

ஐயோ 
இது என்ன ஒப்பாரி
அந்தப்பக்கம் கிழிஞ்சு போச்சு
சுசுசுசுசுசுசுசுசுசுசுசுசுசு!!!
ப.பார்தீ

Tuesday 29 January 2013

நம்பினோர் கைவிடப்படார்


நடு நிசிக்கனவா
இல்லை நாலடியார் வரியா
பொருள் ஒன்றோ
பூமியில் புதையும்வரை
அன்பு

இது என்ன
இரசனையில் மாற்றமோ
இல்லை
இரசாயன மாற்றமோ
எது வான போதும்
என் அருகில் நீ வேண்டும்