இரவின் தனிமையில்
தூங்கிக்கிடைக்கும்
நட்சத்திரங்களை
மேகக்கூட்டம் மூடத்தொடங்கி விட்டது
மின்னல் ஒளியில்
பொழுது புலர்ந்விடாதா என
பூமியில் மொட்டுக்கள்
ஏங்கித்துடிக்கின்றது
ஆகாயத்திற்கும்
பூமிக்கும்மாக ஈர்ப்பு
அந்தரத்தில்
மிதக்கத் தொடங்கி விட்டது
நேற்று இன்று நாளை
உணர்ச்சியின் கண்ணீர்
உப்புக் கரசலாகி
உள்ளத்தை அரிக்கின்றது
தவிர்ப்பும் தவிப்பும்
உள்ளக் கேள்விகளோடு
நொருங்கிகிடக்கும்
கண்ணாடியாக
ப.பார்தீ
No comments:
Post a Comment