Friday 22 March 2013

தொலைந்த மந்தைகள்



நாட்டைபற்றி எனக்கு
என்ன கவலை
நீதி கிடைத்தால் என்ன
நிலம் அழிந்தால் என்ன

நான் வேற்றுக் கிரகவாசியா
இல்லை
வெளிநாட்டில் குடிபுகுந்த
ஈழத்து தமிழன்


அவர்களுக்கு ஏதுமதி
அவர்கள் இயங்கியபோது இல்லாத கோசம்
இவர்கள் விளையாட்டு பிள்ளைகள்
வினைதான் என்ன?

எல்லாம் அரசியல்
எதற்குச் சாக்கடை
வேலை வீடு காசு சொந்தம் இது போதும்
வீண் கதை எதற்கு

சோத்துக்கு வழி உண்டா
சுறண்டல் பிழைப்புண்டா
நேற்ரைக்கு சந்தியில
நம்மடையல் பேசியது

ஊக்கபடுத்தல் இல்லை
உழைப்பாரை போற்றவில்லை
சேற்றுக்குள் நின்று கொண்டு
மாற்று வழி பேசினம்

தலைமை வந்தால், கொடிதூக்க
தாங்கள் போய் நிற்கலாமாம்
நினைவிருக்கா அவர்வார்த்தை
மர நிழலின் தலைவர்கலே

மாற்று வழி வேண்டித் தானே
மண்ணிலே அமைதி கொண்டார்
நேற்றுவரை நடந்தவைகள்
நாளை தான் பதில் சொல்லும்
ப.பார்தீ

No comments:

Post a Comment