Monday 10 November 2014

நிர்வாணப் பூக்கள்.


யூலை 5

மறுபடியும் கரும் வீரருக்காய் நினைவுகளைச் 
சுமந்து கொண்டு கண்ணீர் சொரிகின்றன
 மேகங்கள்.

இடி மட்டும் வராது வானுக்குள்ளேயே 

புதைந்து கொண்டு காற்றிடம் 
முணுமுணுத்தது.

அவளுக்குள்...........


அவளுக்குள்...........
எழுதக்கூடதென்று நினைப்பதுண்டு

ஆனாலும்

உன் கூந்தல்
என்னைத் தொடுவதற்காய்
என் பெருமூச்சில் பயனற்றுக்கிடக்கிறது ஆயுள்

காதலில் பொறுமைதான் வெற்றி என்பார்கள்
என் ஆசைகள் உணர்வதில்லை யார் ஒழுங்கையும்

நடு நிலையாளருக்கு ..


ஐயாமாரே
நீங்கள்
நீதிபதிகளாகவே இருந்து விடுங்கள்

குற்றங்களும்
வழக்குகளும்
உங்களைத் தேடப்போவதில்லை

நீங்கள்
பேசும் நீதிகளில்
எங்கள் வயிறும்
எங்கள் வீடும்
மகிழப்போதில்லை