அவளுக்குள்...........எழுதக்கூடதென்று நினைப்பதுண்டுஆனாலும்
உன் கூந்தல்
என்னைத் தொடுவதற்காய்
என் பெருமூச்சில் பயனற்றுக்கிடக்கிறது ஆயுள்
காதலில் பொறுமைதான் வெற்றி என்பார்கள்
என் ஆசைகள் உணர்வதில்லை யார் ஒழுங்கையும்
எப்படியும் வந்துவிடுவாய் என்று எனக்குத்தெரியும். நீவரும்போது
என் உடல் மட்டும் மண்ணோடு கலந்திருக்கும்.
ஒவ்வொரு விடியலிலும் சூரியனோடு மோதி
பனி தூறல் தோற்பதுண்டு
அதுபோல்தான் காதலும்
உணராதவர்கள்
மரண வலி என்பார்கள். மரணத்துக்கேது வலி
அது வந்தால்
நாம் இல்லை
இது வந்தால்
நாம் இருப்போம்
நமக்குள் இல்லை அவளுக்குள்
ப.பார்தீ
No comments:
Post a Comment