கட்டிலின் கீழே தூசிபடிந்த பாட்டியின் பழைய இறங்கு பெட்டிக்குள் உள்ள அவள் நாளேட்டின் உண்மை எழுத்தைப் புணரமுடியாத கண்களைப்போல் காரணம் தேடி அலக்கழியும் வாழ்கை புதுப்புது அர்தங்கள் உணர்த்திச் செல்ல
பிரிவில் வறழும் காதலர்போல் விழுந்து கரைந்த சருகுகளைக் காணாது தனித்துக்கிடக்கும் மரத்தடி அவள் உதட்டின் முறுவல் போல் அரும்பும் குருத்துகள் காலத்தைக் காதலித்து பொழுதோடு காமுற தாவணி மறைவில் ஓரக்கண்ணால் உசுப்பிவிடும் அவள் பார்வை போல் வசந்த கால வாசல் கதவுகள் மெல்லத் திறக்கின்றது
என் முற்றத்தில்தான் அவள் பிறந்தாள் அவள் அண்ணனும் பிறந்தான் என் வயது அவர்கள் பாட்டன் வயதிலும் பல ஆண்டுகள் மூத்தது உங்களுக்குத் தெரியும் நீங்கள் கொடுத்த சுதந்திரம் சிறையிலும் கொடியதென்று எத்தனை முறை அவர்கள் என்னை தனியாகவிட்டு போயிருக்கிறார்கள் எத்தனை முறை நான் உறிஞ்சிய நீரில் தமிழனின் இரத்தவாடை எத்தனை
அவன் இருப்பது ஒரு விளையாட்டு மாடம் விளையாடும் குழந்தைகளில் அவன் அகதிப்பட்டம் கேட்ட சுதந்திர தாகம். அவன் விளையாடுகிறான் காலத்தின் காயத்தை கலைகளாய்ப் படைத்து சிலைகளாய் வடித்து சிந்தையாக்கி
அவன் அங்கிருக்கும் பொருட்களால் ஆயுதம் செய்கிறான் அதைக் கொண்டு தாகர்க்க அடுக்குமாடி வீடுகளும் கட்டுகிறான் எதிரில் நிற்கும் குழந்தைகளை எதிரியாய் எண்ணுகிறான்
அந்தவயது ஒரு விசித்திரமானது பருவத்தைச் சுமந்து கொண்டு சில பருக்கள் முகத்தை முத்தமிட்டது எண்ணற்ற கனவுகள் இயற்கையையும்மீறி மாற்றத்தில் காதல் கொண்டது
கட்டுப்பாடுகள் எல்லாம் இறுக்கப்பட்ட தூக்கு கயிறாக பிணைந்து கிடந்தது அடயாளம் தெரியாமலே அங்கங்கள் மாற்றங்கண்டது அப்போது தனிமை வரமாகப்பட்டது வாதாட முடியாத வேதாந்த சித்தாந்தங்கள் ஒரு புதியதை பார்க்க எண்ணியது அதன் அழகில் மூழ்க எண்ணியது அதற்காக தேடவும் தொடங்கியது
இது ஒரு மாற்றத்தை தேடிய வளர்ச்சி தட்டிக்கொடுக்கும் கைகளை முத்தமிடும் ஏக்கம் அதன் அன்பின் பிடிப்பில் அழகாகும் வாழ்கை விதையாய்