சாயம் பூசிய விரல்கள்
விளக்கி நின்றது
ஜனநாயகம் ஓர்
பச்சோந்திகளின் வாழ்விடம் என்று
வாக்குப் பெட்டிக்கு முன்
வரையப்பட்ட
வாக்குறிதிகள் அதன்
கிரீடமாய் எங்களை ஊக்கிவித்தது
எத்தனை கேள்விகள்
எத்தனை சந்தேகங்கள்
எல்லாம் ஊமைகளின் வார்த்தயாய்
உள்ளுக்குள் புதைந்து கிடந்தது
வீபூதி பூசிய ஐயனும்
குர்றான் தூக்கிய மொளளவியும்
சிலுவை தூக்கிய பாதரும்
சந்தர்ப வாதத்தால்
புத்தனைத்தம் கடவுளாக்கத் துடித்தனர்
இது நடந்துவிடும் அது நடந்துவிடும் என
ஆழப்புதைந்த ஆன்மாக்கள்
யாரும் கண்டுகொள்ளாத ஏக்கத்தில்
கனவுகளில் கண்ணீர் விட்டனர்
ஏதோ பார்போம் கிடைப்பதை
எடுப்போம் என்ற இயலாமை
அடிமைகளின் சுதந்திரத்தாகத்தை
இல்லாது போக்கிவிட்டது
உலகின் முன்.
எது எவ்வாறும் போகட்டும்
சாயம் காயாத விரல்கள்
ஜனநாயம் அதிகாரங்களின்
சுதந்திரமே எனக் காண்பித்தது
அதிகாரி சொன்ன
"அந்தப்பெட்டியில் போடுங்கள்" என்ற வார்த்தையில்
விளக்கி நின்றது
ஜனநாயகம் ஓர்
பச்சோந்திகளின் வாழ்விடம் என்று
வாக்குப் பெட்டிக்கு முன்
வரையப்பட்ட
வாக்குறிதிகள் அதன்
கிரீடமாய் எங்களை ஊக்கிவித்தது
எத்தனை கேள்விகள்
எத்தனை சந்தேகங்கள்
எல்லாம் ஊமைகளின் வார்த்தயாய்
உள்ளுக்குள் புதைந்து கிடந்தது
வீபூதி பூசிய ஐயனும்
குர்றான் தூக்கிய மொளளவியும்
சிலுவை தூக்கிய பாதரும்
சந்தர்ப வாதத்தால்
புத்தனைத்தம் கடவுளாக்கத் துடித்தனர்
இது நடந்துவிடும் அது நடந்துவிடும் என
ஆழப்புதைந்த ஆன்மாக்கள்
யாரும் கண்டுகொள்ளாத ஏக்கத்தில்
கனவுகளில் கண்ணீர் விட்டனர்
ஏதோ பார்போம் கிடைப்பதை
எடுப்போம் என்ற இயலாமை
அடிமைகளின் சுதந்திரத்தாகத்தை
இல்லாது போக்கிவிட்டது
உலகின் முன்.
எது எவ்வாறும் போகட்டும்
சாயம் காயாத விரல்கள்
ஜனநாயம் அதிகாரங்களின்
சுதந்திரமே எனக் காண்பித்தது
அதிகாரி சொன்ன
"அந்தப்பெட்டியில் போடுங்கள்" என்ற வார்த்தையில்
No comments:
Post a Comment