Friday 30 October 2015

கனவின் நிறம்

என்
கனவுகளுக்கு வண்ணம் பூச
விரும்புகிறேன்


யாரும் கண்டிராத
கற்பனை செய்திராத
தூரிகை வைத்திருக்கின்றேன்


என் சிந்தை
பட்டாம் பூச்சிபோல் பல
வண்ணங்களால் நிறைந்துள்ளது

முத்தம் தெரியாத குழந்தையின் உதட்டில்
தம்
கன்னத்தை ஒற்றி விட்டு
அப்பாவும் அம்மாவும் சேர்ந்து ஆர்ப்பரிக்கும்
காட்சிபோலானது

அதில் இருந்து ஒரு வாத்தையைக்
களவெடுக்கப்போகின்றேன்
ஆனாலும் அதை
காட்சிப்படுத்தப் போவதுமில்லை

என் கனவின்கரு எண்ணற்ற
எண்ணக்கிறுக்கள்களைத் தோற்றுவிக்கும்
வண்ணத்திற்கான ஆயத்தம்
இப்போது தெரிந்திருக்கும்
என் கனவுகளை வண்ணத்தால்
வடிவமைக்கும் தூரிகையையும்
களவெடுத்த வார்தையையும்.

No comments:

Post a Comment