அனுபவங்களின் நினைவுகளைக்கொண்டுவாழ்வுக்கு உயிர் ஊட்டத்
துயரங்களை
வண்ணங்கள் நிறைந்த தொட்டியில்
நிறைத்திருக்கின்றேன்
கதையின்
நாயகிக்காய்
அழிவின் இடையே
எழுந்து நிற்கும் தேவைகளை
நம்பிக்கையாய்
சமர்ப்பித்துள்ளேன்
நடந்து கழித்த தெருத்தூரத்தின்
நற் கற்பிதங்களை
கருவாக்கி
நடக்க இருக்கும் தெருவில்பரப்பி
பாதுகாப்பை உறுதி செய்கின்றேன்
வாழ்வுக்கும் சாவுக்குமிடையில்
எண்ணங்கள் திருப்திகொள்ள
நிறமூறிய துயரத்தின் கீலங்களை
நம்பிக்கையின் துணைகொண்டு
கடக்கவிருக்கும்
பயணத்தின் பலனுக்காய்
காத்திருக்கின்றேன்
ப.பார்தீ
No comments:
Post a Comment