Friday 30 October 2015

நிறமூறிய துயரம்


அனுபவங்களின் நினைவுகளைக்கொண்டு
வாழ்வுக்கு உயிர் ஊட்டத்
துயரங்களை
வண்ணங்கள் நிறைந்த தொட்டியில்
நிறைத்திருக்கின்றேன்


கதையின்
நாயகிக்காய்
அழிவின் இடையே
எழுந்து நிற்கும் தேவைகளை
நம்பிக்கையாய்
சமர்ப்பித்துள்ளேன்

நடந்து கழித்த தெருத்தூரத்தின்
நற் கற்பிதங்களை
கருவாக்கி
நடக்க இருக்கும் தெருவில்பரப்பி
பாதுகாப்பை உறுதி செய்கின்றேன்

வாழ்வுக்கும் சாவுக்குமிடையில்
எண்ணங்கள் திருப்திகொள்ள
நிறமூறிய துயரத்தின் கீலங்களை
நம்பிக்கையின் துணைகொண்டு
கடக்கவிருக்கும்
பயணத்தின் பலனுக்காய்
காத்திருக்கின்றேன்
ப.பார்தீ

No comments:

Post a Comment