Wednesday 28 October 2015

என்னடா உலகமிது


நன்றி என்று சொன்னால்
நாய்போல்
பார்க்கிறான்
நல்ல
தமிழில் நான்கு வார்த்தை
கதைத்துவிட்டால்
காதைப் பொத்தி
பண்டிதர் என்று
பகிடியாய்
பட்டம் சூட்டுகிறான்

என்னடா
உலகமிது
தாய் மொழியை
தன் இனமே
வெறுக்கிறது
இல்லை
தரம் கெடுக்க
கலப்பணம் செய்கிறது.

பாமரன் கூட
தாய்மொழி பேசுறான்
படித்தவன் தானடா
கலப்பணம் செய்கிறான்
கேவலம்
ஆங்கிலம் கலப்பதில்
அத்துனை இன்பமோ
ஐயனே! அம்மையே
யாரைநான் நோகுவேன்!
ப.பார்தீ

No comments:

Post a Comment