மரணம் கொள்ளும் வாழ்வு.
இடுகாடுகள் வெறித்துப்போய்ஊரெலாம் பிணக்குவியலைபுழுத் தின்ன
புழுதி கொண்ட நிலப்பரப்பு
ஊண் வடிந்து
சேறாக
வாழ்வு கொண்ட பயணம்
திசை அறியாமல்
திக்கு முக்காட
குண்டெறிந்தவன்
கோவணத்தைக் குறிவைத்து
அம்மணத்தில் ஆயுதம் தேட
மரணம்
வலியாகப்படவில்லை
வாழ்விழந்த மறுநாளில்
(ப.பார்தீ)
No comments:
Post a Comment