Friday 30 October 2015

ஆழிக்குள் மூழ்குமோ அறம்


காலத்தில்
கடந்துவந்த நினைவுகளைக்
காக்க
கடலின் ஆழத்தில்
கரைந்து போகா
வீடு கட்டுகிறேன்

நான் மிதந்துவந்த
வாழ்வின் வன்
அனுபவங்களைக் கொண்டு
அடிக்கல் நாட்டினேன்

காலம்தந்த
நல் மனிதர்களை
கற்களாய் ஆக்கினேன்

சத்தியம்தந்த
வெற்றிகளை
கூரையாய் பரப்பினேன

மூழ்காத என்
முற்றத்தில்
புன்னகைகளைத் தூவினேன்

என்
வாயில் கதவை
"உள்ளே உண்மைகள் கவனம்"
என்ற வாசகத்தோடு
திறந்து வைத்திருக்கின்றேன்.

No comments:

Post a Comment