அசடு அசடு
அப்படி எல்லாம்
நடந்து கொள்ளக்கூடாது
நீ பார்க்கும் துரம்
மட்டும்தான்
உலகத்தின் எல்லை அல்ல
உன் வலிகள்தான்
உலகத்தில்
தொடக்கமல்ல
ஒரு கரையிடம்
கேட்டுப்பார்
அலைகளின் வலி தெரியும்
ஆனாலும்
கடல் அடிப்பதை
நிறுத்தியதில்லை அது
வாழ்வின் அர்த்தம் போன்றது
தேடல் வலின்தொடக்கம்
தேடத்தொடங்கியவன் நீ
வாழ்வின் வலியாகின்றாய்
வலிகளில் அமைதியற்று
அர்த்தமின்றி
உலகை ஏசுகின்றாய்
எடுத்ததை கொடுக்க நினை
ஏக்கங்கள்
இன்னும் வீதியில் இருக்கின்றது.
சேர்த உன்னிடம் திருப்பி வாங்க
ப.பார்தீ
No comments:
Post a Comment