Friday 30 October 2015

நினைவோர் பிரளையம்


இருளுக்காய் காத்துக்கிடக்கும்
அந்திப்பொழுதைப்போல்
மூச்சுக்காற்றில் அவள்
அவரோகணத்தில் நகர்ந்து செல்ல

வெறித்துப்போன இதையத்துள்
சில்லறைகள் சலசலப்பதாய் உணர்வு
வருமான வரிச்சிட்டைகள்
வாசல் கதவைத் தட்டுவது போல் பீதி

இருக்கும் திசை
மேற்கோ கிழக்கோ புரியாமல்
புணர்ந்த மேகத்தில்
நனைந்து விறைக்கிறது
நான் என்ற தனிமை
(ப.பார்தீ)

No comments:

Post a Comment