Friday 30 October 2015

ஆழம்.

காதல் 
காரணமின்றி சிரிக்கக் கற்றுத்தந்தது.
காதல் 
காரணம் தேடிச் சண்டையிடக் கற்றுத்தந்தது
காதல்
காரணம் இன்றிப் பிரியவும் கற்றுத்தந்தது

காதல் எனக்குக் கவிதை எழுதவும் கற்றுத்தந்தது

காதல் என் போதி மரம்

அது வாழ்கையின் ஈர்ப்பு
உலக இயக்கத்தின் ஆன்மா

அது வலிகளில் இருந்து ஆழமானது

அது முட்கள் நிறைந்த
அழகிய பூவனம்

அது சுவாசம்
பிரிவுக்கு இடம் கொடுக்காத துடிப்பு

அது திருப்தி பெறாத தேவை

அன்பு பாசம் நேசம் பக்தி எல்லாம் சேர்ந்த கலவை.

என்னை
நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? என்று கேட்பது புரிகிறது.
ஆம் என்றால்
அது
உங்களையும் ஆழமாக்கும் காதலில்
ப.பார்தீ

No comments:

Post a Comment