Friday 30 October 2015

உதிரும் நினைவுகள்.


மழை ஓய்ந்த 
பொழுதின்
மெல் இருளின்
வழியே
இதமாக
முட்டி மோதும்
குழிர்காற்றில்


மெல்லச்
சிலிர்த்த மனதில்
தனிமை
சில சங்கதிகளை
அவள் நினைவின்
இராகங்களாய்
மீட்டத்தொடங்கியது

சற்றும்
களைப்பின்றி
மேகங்கள்
கூடிப் பிரிந்து பறந்து
கணப்பொழுதில்
வாழ்வை
வாழ்ந்துகாட்டியது

ஒப்புக்கு
ஓரிரு பறவைகள்
சுரங்களில்
அழகாய்
அவள் குரலை
நினைவில் தந்தது

எதிரில்
பூமட்டும்
நீரின் கனதியில்
வளைந்து
பிரிவில் அவள்
விழி போல்
கலைந்து கிடந்தது

என் சுவாசம்மட்டும்
கற்றில் கலந்து
என் கல்லறையின்
மேல் ஒரு பூவாய்
மலர்ந்தது
அவளுக்காய்
என் காதலோடு
காத்துக்கிடந்தது

ப.பார்தீ

No comments:

Post a Comment