Friday 30 October 2015

நான் கவிஞன் ஆகப்போகிறேன்


கையில்
முள்ளும்
சொந்தத்தில்
சில வார்த்தைகளும் உள்ளது


வார்த்தைகளை
வளர்க்கவும் சேர்க்கவும்
எனக்குள்
கற்பனையும் இல்லை
கருவும் இல்லை

ஆனாலும்
கவிதை எழுதவேண்டும்
என்ற ஆசை

கவிதைக்காய் அந்த
முள்ளில்
இரத்தம் தோய்த்தேன்
வலியின் கோரத்தில்
இரத்தத்தை விசிறி எறிந்தேன்
வலியில் வார்த்தைகள் பிறந்தது

ஒற்றைகள் இலை
ஏங்கினேன்

எதிரில் இருந்தவன் சிரித்தான்
அருகில் வந்து
இறைவனைப்போல்
இல்லாத ஒன்றை தேடாதே
இருக்கும் ஒன்றை வளர்த்துக்கொள்.
கற்பனையைவிட
காலம் வார்த்தைகள்தரும் என்றான்.

இருந்தும் எழுதவேண்டும் என்ற ஆசை
முள்ளாய் குத்தியது

No comments:

Post a Comment