மார்புக்குள் மறைந்திருக்கும்
மனதையும்
மனதுக்குள் மறைந்திருக்கும்
உணர்வையும்
அறியாத பிண்டங்களை
உண்மையின்சாட்சி கொண்டு
கரைக்க போகின்றேன்.
வானத்தில் புதைந்து கிடக்கும்
நட்சத்திரங்களை
காற்றோடு கரைபுறளும்
மேகக்கூட்டத்தை
வாடை சோலகமென
வந்து போகும் காற்றை
சாட்சியாக்கி
வாய்விட்டு குரைக்காத
நாய்களை
வணங்கி வரம் கேட்டும்
தரமறுத்த கடவுள்களை
உணர்வைக்கொன்று
ஊனமாய் திரியும் மனிதர்களை
கூண்டில் ஏற்றி
நீதியின் கண்களை
அவிழ்த்து
தண்டனையின் கோரத்தை
பரப்பி
விதியற்ற சாவிற்கு
நீதி கோருகிறேன்
பாடங்கள் அற்ற மனித ஒழுக்கத்தை
பழக்கமாக்க.
(ப.பார்தீ)
No comments:
Post a Comment