Friday 30 October 2015

அகதிக் கனவு


கனவுகள்
ஏராளம் பெருகின

இருக்க இடமில்லாது
தூக்கத்தை மறந்து
பிசத்தல்
வார்தைகளாய்ப் பிரசவித்தது

இருப்பவனுக்கும்
இல்லாதவனுக்கும்
இருக்கும் ஒரு வார்த்தை
இல்லை என்பது போல் ஒரு விம்பம்

காட்சிப்படுத்த முடியாத
கடும் ஒளியில்
காணமுடியாத
பேர் அண்டத்தின்
பெரு உணர்வாய்
ஓர் படிமம்

கண்ணீர் வடிந்து
வாயில் உவர்க
கனவை நீட்டிக்
காத்திருந்தது
தூக்கம்
பசியைத்தந்தது
பாசத்தோடு உணவு தரும்
உறவுகளைப் பிரித்தது

ஒளியைத்தந்தது
ஒளியினூடே உலகை
அளக்கும் விழியைப் பறித்தது

மொழியைதந்தது
மொழி பேசும்
உணர்வைப்பறித்தது

குளிரைத்தந்தது
குளிரைப்போக்கும்
சூட்டைப்பறித்தது

இருந்தும்
தூக்கம்
கனவைத்தந்தது

No comments:

Post a Comment