மூடு பனி இரவில்
மூக்காடு செப்பனிட்டு
நீரில் அல்லிபோல
நெஞ்சுக்குள் பூத்த மலர்
ஓலைக் கூறை இடை
ஒழுகும் நீரினைப்போல்
காலத் தேவையதாய்
கண்ணுக்கள் பதிசெய்ய
வானம் பார்த்திடாத
வனப்பில் குண்டுமணி
நிலக்கடலாகி
நெஞ்சுக்குள் கூத்தடிக்கும்
மேளச் சத்தமதாய்
மெல்லிதயம் சுதி செய்யும்
கோணல் கோடுகளும்
கொள்ளை கொள்ளும் சித்திரமாய்
மாணம் மரியாதை
மந்திக்கும் அஞ்சிநிர்க்கும்
கோணல் புளிகூட
கொய்யாவாய் நாசுவைக்கும்
ஏழை வாசல்முதல்
கோழை உள்ளம்வரை
கொள்ளை கொள்ளும் ரிங்காரம்
கொப்பளிக்கும் நீரூற்றாய்
ஆதி பந்தத்தில்
அந்தத்தை எட்டாத
நீளும் ஓர் உணர்வே
நெஞ்சுக்குள் மலர் நினைவே
ப.பார்தீ
No comments:
Post a Comment