ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
நீர் ஆளும் பூமியிலே வந்துதித்த நித்திலமே
நீல வான் வெளியில் ஓளி கொடுக்கும் சூரியனே
அன்பு முகம்தேடி அணைக்க வந்த ஆருயிரே
வண்டு முகம்தேடும் மகரந்தப் பூ இதழே
கற்பனையில் நான் காணும் கழிதனை தீர்க்கவந்த
காவியத்தில் பேர்சொல்லும் தமிழ் அரசே
சிரு வாய் மலர்ந்தருளி செல்வமே பால் குடித்தாய்
சித்திரமே செங்கோள் பேரரசே கண்மணியே நீ உறங்கு
நீதிக்குப் போர் எடுத்து சாதிக்கு கொள்ளியிடு
மூடப் பழக்கத்தை மொட்டோடு கிள்ளி எறி
பாட்டி கதை பாட்டன் கதை கேட்டதோடு நி்ன்றிடாமல்
கேள்வியால் கனைதொடுத்து ஞானத்தை பெரிக்கிவிடு
அடித்தார் யாருமுண்டோ ஆக்கினைகள் செய்தாரை
தடுத்து நீ நின்றால் தலைமகனே மேல் எழுவாய்
உடுக்குச்சத்தமும் ஒப்பாரி ஓசையும் எதற்கு பூமியிலே
விழித்து நீ எழுந்து விஞ்ஞானம் கற்றறிவாய்
தங்கத்தில் தொ ட்டிசெய்தும் தாய்சேலை ஏனைகட்டீ
ஏற்றத்தாழ்வோடு இங்கு வாழ்கின்றார் ஏன் என்ற கேள்வியோடு என் மகனே கண்வளராய்
மாற்றார் போல தாம் வாழ நினைத்திங்கு
சொந்த விருப்பங்களை சுந்தரமே கொள்ளிவைப்பார்
போராடி போராடி தேர்ந்தாலும் உன்கையை
நீட்டாதே பிறர்முன்னே நாற்றம் எடுத்திடுவாய்
நாவிலே உண்மை சொல்லு வார்தையில் உறுதிகொள்ளு
நம்பிக்கை உந்தன்மீது நன்றே வைத்து விடு
கோனே குலக்கொடியே கொள்கையேடு வாழ்திடப்பா
தாய்நாடும் தாய்மொழியும் உயிராய் கொண்டிடப்பா
எல்லையில்லா இவ்வுலகில் எனக்கு நீ பிறந்திட்டாய்
தொல்லை அறியாத நல்ல மனிதனாகு
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ஆராரோ ஆரிவரோ ஆராரோ ஆரிவரோ
ப.பார்தீ
No comments:
Post a Comment