Friday 12 April 2013

எங்கள் மரணங்கள்


அவர்கள் முகங்கள் கிழிந்து
சாட்சிகள் போராளியாக்கப்படும்போது 
அதன் 
பூகம்பத்தில் இருந்து
புதிய தேசத்தின் பரிநாமம் பிறப்பொடுக்கும்


சல்லடையாக்கப்பட்ட
பிஞ்சுகள் சப்பித் துப்பிய
இனிப்புதுண்டின் 
தேச பக்தி
காந்தியில் கோலைப் பிடுங்கட்டும்

யூதன் கடன் கொடுத்துக் கவர்ந்த தேசத்திலும்
கார்மால்க்ஸ் விதைத்த 
சமதர்மத்திலும்
ஒரு வெற்றிக்கு
எத்தனை தோல்விகளின்
விதைகள் என்பதை உள்ளம் உணரட்டும்

ஓடும் இரத்ததில்
எதிர்ப்பு இல்லாத உணர்வும்
அடைந்தபின் விவாதமே வளர்ச்சி என்பதையும்
பரந்த உள்ளங்கள் 
நினைக்கட்டும்

இனியும் சாகோம்- என
புதிய பிறப்புக்கள் விழிக்கட்டும்
அவர்கள் புன்னகையில் 
எங்கள் மரணங்கள்
மகிழட்டும்
ப.பார்தீ


 

No comments:

Post a Comment