கரையா பொழுதிலே
கவிதையும் வானமும்
நிலவுக்கு முத்தமிட
தாமரையின் மேலமர்ந்து
தாலாட்டுப் பாடிஎழ
மலை ஒன்றின் உச்சியதாய்
நீர் வீழ்ச்சி சல சலத்து
மௌனத் திரை உடைந்து
தாய் மார்பாய்
பால் சுரக்க
பூ வாடை கீற்றாகி
பூங்குழவி மேனிதொட
மெல்லக் கிளர்ந்தெழுந்து
தாய்மைக்குத்
தாயாக
நிலவும் வானமும்
கண்ணீரால் மொழி பேசி
பருவம் பக்குவத்தை
பார்வைக்குள்
புதைத்ததுவே
ப.பார்தீ
No comments:
Post a Comment