Monday 24 June 2013

நினைவில் பூத்த அல்லி


அந்திவானம் கறுத்திருக்கு
அடைமழையும் காத்திருக்கு
நெஞ்சுக்குள்ள பூத்த அல்லி
கரை தடவக் காத்திருக்கு

நிலவுக்கு தூது செல்ல
தென்றலும் தவமிருக்கு
நெஞ்சுக்குள்ள அவள் நினைவோ
நீரூற்றாய் வழிந்திருக்கு


கன்னத்தில் தந்த முத்தம்
கண்மூடப் பூத்திருக்கு
கார் குழலில் மீன் நீந்த
கண்களும் காத்திருக்கு

றோஜக்கு வெட்கம் வந்து
அவள் இதழை தாக்கிருக்கு
மயில் ஆடும் பாறை எல்லாம்
அவள் வரவால் செழித்திருக்கு

பொண் வண்டு சிறகடித்து
கண்ணுக்குள் புதைந்திருக்கு
பூங்கோதை நினைவுதானே
புலமைக்குப் போரூற்று
ப.பார்தீ

No comments:

Post a Comment