மேகம் கருக்கும் நேரம் பெண்நே
மின்னல் ஒழிரக்கண்டேன்
கூந்தல் மறைவில் நின்று கண்நே
வானம் கரையக்கண்டேன்
நீரில் குழித்த மீன்கள்
நெஞ்சில் தாகம் தணிக்கக்கண்டேன்
பூவை முகர்ந்த வண்டு
உன்னில் தேனைப்பருகக்கண்டேன்
பாயும் நதிகள் எல்லாம்
கண்ணில் நீந்தித் திரிதல் கண்டேன்
பொழுதும் புலரும்போது
உந்தன் சிரிப்பில் விழிக்ககண்டேன்
உணவு சமைக்கும்போது
உப்பாய் நீயும் சேரக்கண்டேன்
கவிதை எழுதும்போது
மொழியாய் காதல் நானும் கொண்டேன்
பொழுது கரையும்போது
புவியில் தனிமை கரையக் கண்டேன்
இதுதான் வாழ்க்கை என்றால்
எனக்குள் உயிராய் உன்னைக்கண்டேன்
ப.பார்தீ
No comments:
Post a Comment