தெட்டு விட
எத்தனித்துக் கொண்டே இருக்கின்றேன்
ஏனோ முற்றுகையிட முடியாத
எண்ணம் எனக்குள்
தட்டித் தட்டி
பாளையின் பயனை அருந்தியபோது
வலிக்கும் சுகத்திற்கும் இடையான
இரட்டை தன்மையில்
எண்ணத்தை விழிக்கின்றேன்
உளைப்புக்கும் வறுமைக்கும் இடையில்
ஒற்றுமையைத் தேடி
வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும் இடையில்
மரணம் ஊஞ்சல் ஆடுகின்றது
அவனைப்போல் இனைப்போல்
என்ற கற்பனைகள்
காலத்தை உணறவிடாது
மரண முகவரியில் மொளனிக்க
யாவரும் தனக்கானதை தட்டியதில்லை
சமூகமோ
நேர்மையான வெளிப்படை உள்ளங்களை
சாலரப்பார்வையால்
நுாதன கேள்விகளாக்கி
விடைகளை தாங்கலே தீட்டும்
சரித்திரப் படைப்புக்கள்
விலக்கல்ல நான்
ப.பார்தீ
No comments:
Post a Comment