Tuesday 15 October 2013

அவர்கள்


காலத்தால் சுருங்கியவர்கள்
கதைகளைக்
கேட்க வெறுக்காதீர்

அவர்கள்
நிழலின் பின் தவிக்கும்
ஒளிக்கீற்றுக்கள்


அவர்கள் 
கண்கள் தேசங்களை
ரசித்தவை

அவர்கள் 
காதுகள் அனுபவங்களை
சேர்த்தவை


அவர்கள்
நாக்குகள் ஒழுக்கத்தை
போதிப்பவை

அவர்கள் வாழ்வு
உன் பிறப்புக்கு முன்னால்
உன்னைப் பெறுவிப்பவை


அவர்கள் பேசுவது
கேட்காவிட்டாலும்
வார்தைகளை விடாதீர்

அவர்கள் 
இயற்கையின் வழர்ச்சிப்
படிகள்

அவர்கள்
எமக்குள் புதைந்து கிடக்கும்
அடுத்த பிறப்புக்கள்
ப.பார்தீ

No comments:

Post a Comment