கதைகளைக்
கேட்க வெறுக்காதீர்
அவர்கள்
நிழலின் பின் தவிக்கும்
ஒளிக்கீற்றுக்கள்
அவர்கள்
கண்கள் தேசங்களை
ரசித்தவை
அவர்கள்
காதுகள் அனுபவங்களை
சேர்த்தவை
அவர்கள்
நாக்குகள் ஒழுக்கத்தை
போதிப்பவை
அவர்கள் வாழ்வு
உன் பிறப்புக்கு முன்னால்
உன்னைப் பெறுவிப்பவை
அவர்கள் பேசுவது
கேட்காவிட்டாலும்
வார்தைகளை விடாதீர்
அவர்கள்
இயற்கையின் வழர்ச்சிப்
படிகள்
அவர்கள்
எமக்குள் புதைந்து கிடக்கும்
அடுத்த பிறப்புக்கள்
ப.பார்தீ
No comments:
Post a Comment