மலர்கலே மன்னித்து விடுங்கள்
உங்களை பறித்து
என் காதலிக்கு பரிசளிக்க விரும்பவில்லை
நாளை அழியும் நீங்கள்
அவளின் பிரிவைத் தாங்க மாட்டீர்கள்
வழிதவறி வரும் காற்றுக் கூட
அவளில் பட்டதும்
தென்றலாக மாறிவிடும்
போதைகூட
பருகினால்தான் உணரலாம்
அவள் பார்வை ஒன்ரே போதையில் உயர்வானது
இங்கு யார்தான் காதலில் திளைக்காதவர்
மகரந்த பூச்சோடு மலரை
முத்தமிடும் வண்டைக் கோட்டுப்பார்
திளைத்தது போக
மீதிநேரத்தின் மயக்கத்தில் வாழும்
இரண்டு குவளயில்
ஒரு போதை
பகிரக் கற்றுக்கொடுத்தவர் யார்?
இதுதான் தேசம்
இதுதான் வாழ்கை
இதுதான் முடிவு
மலர்கலே மன்னிதுவிடுங்கள்
ப.பார்தீ
No comments:
Post a Comment