இதோ
எங்கள் கைகளில்
கொதிநீரும்
சீழும் உள்ளது
இதை
அவர்கள் சுவைக்கட்டும்
நாற்றம் எடுக்கும்
புதை குழிகள்தான்
எங்கள் தேசம்
நயவஞ்சகரிடம்
மீண்டும்
நீதி கேட்கிறது
பாடைகளின் இருப்பு வற்றி
நாற்றம் பொறுக்காது
காக்கைக் கூடு கூட
கொள்ளியாக மாறி
மீதிக்குச்
சேவை செய்தது
ஓநாய்களின் பிடியில்
ஜனநாயகம்
குறுட்டுத்தனமான
மலட்டு எண்ணத்தில்
அறிக்கைக்குள்
அலட்டி விடும்
ஜனநாயக ஒழுங்கு எங்கள் தேசம்
ப.பார்தீ
No comments:
Post a Comment