Thursday 5 December 2013

புதைகுழி இராகம்



இதோ 
எங்கள் கைகளில்
கொதிநீரும்
சீழும் உள்ளது 
இதை 
அவர்கள் சுவைக்கட்டும்


நாற்றம் எடுக்கும்
புதை குழிகள்தான் 
எங்கள் தேசம்
நயவஞ்சகரிடம்
மீண்டும்
நீதி கேட்கிறது

பாடைகளின் இருப்பு வற்றி
நாற்றம் பொறுக்காது
காக்கைக் கூடு கூட
கொள்ளியாக மாறி
மீதிக்குச் 
சேவை செய்தது

ஓநாய்களின் பிடியில்
ஜனநாயகம்
குறுட்டுத்தனமான 
மலட்டு எண்ணத்தில்
அறிக்கைக்குள்
அலட்டி விடும்

ஜனநாயக ஒழுங்கு எங்கள் தேசம்
ப.பார்தீ

No comments:

Post a Comment