Saturday 16 June 2012

அதிசய வாசலில்


உன்னதமான
உலக அதிசய கோபுரத்தின்
அடிவாரத்தில் இருந்து

உன்னை தொடும்
தூரம் வந்தும்
தொடமுடியாமல் தவிக்கும்
கரங்களின் சொந்தக்காரன்

அதோபார்
அதிசயக்கோபுரம்
ஆகாயம் தொடும் உயரம்
அழகை இரசிக்க ஆயிரக்கணக்கில் மக்கள்


எல்லாம் இருந்தும்
ஏழ்மைவாசம்மட்டும்
உன்னை நெருங்குவது இல்லை
ஏனோ நானும் அங்கே

உன்னை இரசிக்க வருபவர்களுக்கு
என் கண்கள் கிடைத்திருந்தால்
இரும்புக் கம்பிகளுக்கு
இல்லாது போயிருக்கும் பிரமாண்டம்

உன் அடிவாரத்தில்
உன்னையும் விற்பனை செய்து
சம்பாத்தியம்

அதிசயம் என்று உன்னை
வரையரை செய்யாவிட்டால்
நீயும் ஆதாயமற்ற
கோபுரம்

அட
அன்று உன்னிடம் வந்திருந்தால்
நானும் நீயும் ஒன்றல்லவா

ஒன்றை மட்டும் புரிந்துகொள்
உலகம் உழழாவிட்டால்
உனக்கும் எனக்கும் வெளிச்சமேது

இரண்டு பக்கங்களில்
ஒன்று விழுவது எழுமாறே
மற்றைய சுழர்ச்சியில்
மாறலாம்
ப.பார்தீ

No comments:

Post a Comment