Friday 1 June 2012

தாயாகிய அவள்


கனவுகளில் கரையும்
பெண்மைக்குத்தான் தெரியும்
அந்த மார்பின்
சுமைகளின் வலி

திங்கள் ஒருமுறை
சிதறும் விதைகளில்
எழாதா ஓர் விருச்சம்
என்ற ஏக்கம்


காது ஓட்டைகளில்
கரையும்  துாற்றல் வலியால்
அவள் கண்களையும் தாண்டி
கால்வாய் திறக்கின்றது

விஞ்ஞானம் எத்தனை வழர்ந்தும்
அவள் வேதனை
இன்றும் தீச்சட்டிகளை
சுமக்கின்றது

சமூதாய ஓட்டத்தில்
கரைய எண்ணும் மனதுக்கு
இயலாமை
துாரத்தே ஒதுக்கிவைக்கின்றது

இரண்டும் சந்தம் சேர்க்கும்
இல்லறத்தில்
இல்லை என்பதை
இவள் மட்டும் சுமப்பான் ஏன்

அவள் எச்சத்தில் தான்
பரம்பரை நீளும் என்ற
எண்ணத்திற்கு தீ மூட்டி

இன்னும்
தாய் உணறாத
மழலைகளுக்கு  மார்பை
சுவைக்ககுடு தாயே!
ப.பார்தீ

No comments:

Post a Comment