Saturday 7 June 2014
அழைப்பு..
அழைப்பு..
எல்லா தேசங்களிலும்
இருக்கும்
அகதிகளே!
உங்கள்
எல்லாக்
கதைகளையும்
எனக்காக எழுதி அனுப்புங்கள்.
உப்புக் காற்றில்
தூங்கும்
மீனவரே!
ஓய்வாகவிருக்கும்
உங்கள்
வள்ளங்களையும்
வலைகளையும்
எனக்காகப் பொதிசெய்யுங்கள்.
உலகுக்கே
உணவு செய்யும் விவசாயிகளே!
காடாகமாறும் நிலங்களையும்,
காட்சிக்குப் போகும்
விவசாயப் பொருட்களையும்,
உரிமை மாற்றி,
என் முகவரிக்கு
அனுப்பி வையுங்கள்.
என் முகவரி
இத்தேசத்தின் ஏதோவோர்
மூலையில்
ஏதோவோர் தெருவில்
இன்னும் அலைந்துகொண்டு
இருக்கின்றது.
நான்
மனித துயரங்கள்பற்றிய
பாரிய கோப்பு ஒன்று தயாரிக்கின்றேன்.
மனித தலைவர்களுக்கு அனுப்பவதற்கு
அவர்கள்தான்
ஆனதுகளை
அழிப்பதில்
சுகங்கானும் மோகத்தில் உள்ளார்கள்.
ஆதலால்
கோப்புக்கு
ஒப்பமிட
மனிதர்களை அழைக்கின்றேன்.
ப.பார்தீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment