Saturday 7 June 2014

உண்டியல்....


உண்டியல்....
ஊருக்குப் போட்டாச்சு
என்றவன்
புன்னகையில் இருந்து
ஒரு கேள்வி

யாருக்குத் தெரியும்
அவன்
இறக்கைகள்
எத்தனிக்கும்போதே
எண்ணத்துள்
பி்க்கப்படுகின்றது என்று.

யூரோவும்
டொலரும்
விலை கூடத்தான்
விற்பனைக்குக் கடைக்குச்சென்று
கண்மூடிக்
காதல் தேசத்தை நினைக்கும்போது

விலை வாசியும்
வீட்டு வாடகையும்
தனி மனிதனுக்கும் உண்டு
அதனால்தான்
தரையில் படுத்து
குளிரையும் தாங்குகிறான்.

மூளையைத்தவிர
முதலீடாக
முற்பது இலட்சம்
ஏயன்சிக்கு கொடுத்ததை
தவிர வேறு
ஏது மீதி?

அவனும் புன்னகை
செய்யட்டுமே
ஊரே....
ப.பார்தீ

No comments:

Post a Comment