Saturday 7 June 2014

நிலவுக்கு...


நிலவுக்கு...
என் கடிதம்
உன்னை சேரும்போது
யாருக்கும் தெரியாமல்
உன்னை
என்னிடம்
தந்துவிடும்.

காற்று
உன் வீட்டுக்கதவை
தட்டும்போதெல்லாம்
நினைத்துப் பார்
நான்
உன் இதயக்கதவைத் தட்டியதை.

நீ
எங்கிருந்தால் என்ன?
நான் உன்னை
நினைக்கும்போதெல்லாம்
அருகில்
இருக்கின்றாய்.

நீ
பார்த
பார்வைகளைக்
கோர்த்து வைத்திருக்கிறேன்
அர்த்தம் எழுத முடியாத
அகராதியாக.

நீ
புகைவண்டி
ஏறும் போதெல்லாம்
உன்னை அறியாது
என்னையும்
கூட்டிச்செல்கிறாய்.

கட்டாயம்
அனுப்பிவை
நீ
நினைக்கும்
உன் நினைவின்
என்னை
ப.பார்தீ

No comments:

Post a Comment