அத்து மீறிப்பிறந்தது
கவிதை
அம்மணமான பொழுதின்
தாலாட்டாய்
ஆயிரம் கசையடிகள்
தீர்ப்பாகிவிட்டது
ஆதாம் ஏவாள் ஆசையும்
தப்பாகிப்போனது
ஆலையங்களின் பெருக்கம்
அடைபட்ட சாக்கடையாய்
ஊர் முழுக்க நாறிக்கிடக்கிறது
கடவுளின் சக்தியால்
முதியேர் இல்லங்களின்
அனுமதி கிடைக்காத அளவிற்கு
பிள்ளைகளின் வளர்ச்சி
பெருகி விட்டது
மன்னராட்சி முற்றுப்பெற்று
மக்கள் ஆட்சி
சர்வதிகாரத்தில்
சுதந்திரம் கண்டது
எல்லாப் போராட்டமும்
சுதந்திரம் விடுதலை
என்னும் தொனியில்
சிறைகளில் வாழ்கிறது
கிராமங்கள்
நகரங்களின் கேலியாகி
நாகரிகம் கற்பிக்கிறது
நகரத்திற்கு
பண்டமாற்று
பணமாகி -பணம்
பண்டங்களை விழுங்கி
பசியாகியது உலகு
ப.பார்தீ
No comments:
Post a Comment