கண்ணீரின் இழப்பை
உணராத மீன்கள்
தண்ணீரோடு உறவாகும்
வாழ்கை என்பது
சூழலால் தீர்மானித்து
அதன் பாதையில் பயனிக்கின்றது
துன்பம் இன்பம்
இயங்கியல் உலகின்
உயிரோட்டம்
இலாபமற்ற வாழ்கையில்
மரணம் பெறுபேராகும் போது
நாம் இயங்குவதில்லை
அடுத்ததை எதிர்பாக்கும் வாழ்க்கை
இழந்த இன்றை வாழ்வதற்காக
ஆவிகள் சித்தரிக்கப்டுகின்றது
சிந்தனை யாவும் நல்லதை எண்ணும் போது
வாழ வேண்டும் என்ற ஏக்கம்
தவறை சரியாக செய்கின்றது
நான் என்ற வெளியில்
எங்களுக்கு என்ற தேடல் வந்த போது
எதிரியானதே உலகு
ப.பார்தீ
No comments:
Post a Comment