Saturday 26 May 2012

அவனும் நீயும் சுயநலவாதிகள்


ஓ காதலே!
உனக்கு மட்டும்
ஏன் இந்த சக்தி

இந்தப் பிரபஞ்சத்தில்
நீ
ஏன் மனிதனாகப் பிறப்பெடுக்கவில்லை


துாண்டலால் தான்
உன்னை உணர முடியும் என்றால்
அதுதான் என்ன

உயிரின் பெறுமதியறியாத
இந்த மானிடர்
உனக்காக அழிகிறார்களே

மனித அறிவை
மழுங்கடிக வந்த சாத்தான்
நீ

மானிடப் பெருக்கத்திற்கு
மனிதனில் குடி
கொள்கின்றாயோ

ஆசைகளின் அடிப்படையில்
உணர்வுகள் எழுகின்றன என்றால்
நீ அதன் தலைவன்

புணர்தலின்  தேவைக்கு
நீ நடத்தும் நாடகத்தால்
நினைவிழந்து நின்மதி தேடுகிறார்கள்

எல்லாம் இயற்கையின் விதியே
என்று மனிதன்
தப்பிக்க எண்ணினால்

ஆறம் அறிவைத் தொலைத்து
அவனும் அதுவாகிறான்

அதனுடன் சேராதே
அடுத்த நிகழ்வில் உன்னை
உதரிவிடுவான்

அவனும் நீயும் சுயநலவாதிகள்

ப.பார்தீ

No comments:

Post a Comment