பட்டணத்து பண்ணையிலே
மந்தை ஒப்ப எங்களிடம்
பணம் எனும் மேச்சல்காரன்
படுத்துகின்ற பாடு இது
உதடுலர்ந்து நீ கேக்க
உடல் நிலையும் சூடு பெற
தவிக்கும் வாய் தனை மறந்து
தணல் காற்றாய் திரிகின்றான்
அடுக்கடையில் பூனையிடம்
அம்மாவும் போராட
அப்பாவின் வரவுமது
அவன் செயலால் ஆவி நிலை
துளை நிலத்தில் நீர் பெருகும்
சுழல் காற்றும் சுவாசமாகும்
அழிவடையும் இயற்கை கூட
அதன் வழியே ஈடேரும்
எல்லாமும் அவன் பார்க்க
இல்லாமை ஏங்கி நிற்க்க
மண்ணோடு நாம் சேர
மலிவு விலை கோரப்படும்
மாறும் என்ற மாக்ஸ்சியத்தால்
மாறும் இந்த சேட்டை எல்லாம்
மனமே நீ கலங்காதே
மானிடம் உன் உயிர் தானே
ப.பார்தீ
No comments:
Post a Comment