உடைக்கப்படாத
மெளன மனத்ததால்
ஊமையாகிய அவள்
என்னை தனிமையில் பேசவைத்தாள்
எல்லாம் பேசிய அவளிடம்
என் நேசத்தை கூறியது
நீருக்குள் நெருப்புடன்
நீந்துவதானது
என்றோ ஓரு நாள்
பூணப் போகும் வேடத்திற்கு
இன்றைய ஒத்திகை
பலன் தருமல்லவா
அன்பை கொடுக்கத் தெரிந்த அவளுக்கு
எடுக்கும் பக்குவம் புரியவில்லையா
இல்லை ஏமாற்றுதல்
என்ற ஐயமா
இயற்கைக்கு மீறிய
அதிசயப்பிறவியல்ல நான்
என் உணர்வுகளுக்கு
இரும்பு வளையம் இடுவதற்கு
தெருவோர விளக்கானாலும்
ஒளியின் வீச்சு ஒன்ரே
என் நேசமும் கூட
நீ உணர்வதற்காய்
உனக்குள் துாங்கும்
மௌனத்தை
உண்மைக்கு தொலை துாரமாக்காத வரை
நீ என் காதலி
ப.பார்தீ
No comments:
Post a Comment