Wednesday 28 March 2012

மௌனம்


உடைக்கப்படாத
மெளன மனத்ததால்
ஊமையாகிய அவள்
என்னை தனிமையில் பேசவைத்தாள்


எல்லாம் பேசிய அவளிடம்
என் நேசத்தை கூறியது
நீருக்குள் நெருப்புடன்
நீந்துவதானது

என்றோ ஓரு நாள்
பூணப் போகும்  வேடத்திற்கு
இன்றைய ஒத்திகை
பலன் தருமல்லவா

அன்பை கொடுக்கத் தெரிந்த அவளுக்கு
எடுக்கும் பக்குவம் புரியவில்லையா
இல்லை ஏமாற்றுதல்
என்ற ஐயமா

இயற்கைக்கு மீறிய
அதிசயப்பிறவியல்ல நான்
என் உணர்வுகளுக்கு
இரும்பு வளையம் இடுவதற்கு

தெருவோர விளக்கானாலும்
ஒளியின் வீச்சு ஒன்ரே
என் நேசமும் கூட
நீ உணர்வதற்காய்

உனக்குள் துாங்கும்
மௌனத்தை
உண்மைக்கு தொலை துாரமாக்காத வரை
நீ என் காதலி
ப.பார்தீ

No comments:

Post a Comment