Saturday 3 March 2012
மடல்
உனக்காக வைத்துள்ள
எனதன்பில்
எழுதாத எண்ணற்ற கதை தோன்றும்
சிறகாக பறக்கின்ற
சிந்தைக்குள்
அலையாக வார்த்தைகள் தடுமாறும்
மறக்காமல் துடிக்கின்ற இதயமும்
உனைக்கானா மறுகணமே
உயிர் சோரும்
வரியாலே நீ செய்யும்
விளையாட்டில்
மதிகூட சில நேரம் விலைபோகும்
ஒரு கோடி உயிர்செல்லும்
தெருகூட
உனக்காக என் வாழ்க்கை வீடாகும்
எழிலோடு எனைப் பார்க்கும்
மலர்கூட
மனம் பார்த்த மறுகணமே தலைவாடும்
ஒளியேடு எனைப் பார்க்கும்
நிழல்கூட
உன் திசைபார்க்க அதன் வழியே மறைந்தோடும்
புதிதான என் தோட்ட
மல்லிகைக்கு
புரியாதா என் சுவாசம் நீ என்று
விதி என்று பொய் சொல்லி
போகாதே
மதி கேளு அது சொல்லும் நானென்று
இனிதான பதிலோடு
மடல் போடு
இணைவேனே நானல்ல நாமென்று
ப.பார்தீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment