இரத்த வாடையில்
சுவாசம் தொலைத்த உன்னை
உணராது விட்டாரே
நேற்றுப் புதைத்த
உடலங்களில் நெளிந்த புழுக்களின்
எண்ணிக்கை மறந்தாரே
தோற்றுப் போனார்
என்று எண்ணி
துரும்பாய் நினைக்கிராரே
பூட்டிவைத்த ஏக்கமெல்லாம்
புழுங்கிப் பொரிதல் கண்டு
காற்றில் பறக்கிறதே
நேற்று இன்று நாளை என்று
நித்தம் ஒரு விலையும் பேசி
நீதி சொல்கிறாரே
போற்ற உந்தன் பாதத்திற்கு
பூ மலர் பறிப்பதற்கு
போராட்டம் வேண்டும் அம்மா
போக விடை தாரும் அம்மா
உண்மையான பொய்கள் முன்னே
உம்மை நாமும் மெய்யாக
ப.பார்தீ
No comments:
Post a Comment