Thursday 22 March 2012

அன்புள்ள அம்மாவிற்கு


இரத்த வாடையில்
சுவாசம் தொலைத்த உன்னை
உணராது விட்டாரே

நேற்றுப் புதைத்த
உடலங்களில் நெளிந்த புழுக்களின்
எண்ணிக்கை மறந்தாரே

தோற்றுப் போனார்
என்று எண்ணி
துரும்பாய் நினைக்கிராரே

பூட்டிவைத்த ஏக்கமெல்லாம்
புழுங்கிப் பொரிதல் கண்டு
காற்றில் பறக்கிறதே

நேற்று இன்று நாளை என்று
நித்தம் ஒரு விலையும் பேசி
நீதி சொல்கிறாரே

போற்ற உந்தன் பாதத்திற்கு
பூ மலர் பறிப்பதற்கு
போராட்டம் வேண்டும் அம்மா

போக விடை தாரும் அம்மா
உண்மையான பொய்கள் முன்னே
உம்மை நாமும் மெய்யாக

ப.பார்தீ

No comments:

Post a Comment