Thursday 8 March 2012

திட்டம்


கூட்டித் துடைக்கப்படும்
இறந்த மரக்கிளைகள்
மீண்டும் போடப்படும்
இரசாயனமாக

அழிக்கப்படடும்  இயற்கை
சுவாசமற்ற உயிர்களாக
விஞ்ஞானத்தால்
பொறுவிக்கப்படுகின்றது


எதிர்கால சந்ததிக்கு
காட்டுவதற்காக
உயிரற்ற ஒளிநாடக்களில் காட்சிகள்
சேமிக்கப்படுகின்றது

கைத்தெழில் புரட்சி
தேவைக்கதிக உற்பத்திக்கு
இயற்கை அழிக்கின்றது
இருந்தும் பட்டினி

முதலாளிகள்
அறிவாளிகளாக்கப்பட்டு
போடப்படும் எதிர்கால திட்டங்கள்
எண்ணற்ற ஏழைகளை உற்பத்தி செய்கின்றது

இவை வேண்டாம் என்ற
எழுச்சி வருவதற்குள்
இயற்கையே மூச்சடக்கும்
திட்டம் அரங்கேறும்
ப.பார்தீ
06/03/2012

No comments:

Post a Comment