கூட்டித் துடைக்கப்படும்
இறந்த மரக்கிளைகள்
மீண்டும் போடப்படும்
இரசாயனமாக
அழிக்கப்படடும் இயற்கை
சுவாசமற்ற உயிர்களாக
விஞ்ஞானத்தால்
பொறுவிக்கப்படுகின்றது
எதிர்கால சந்ததிக்கு
காட்டுவதற்காக
உயிரற்ற ஒளிநாடக்களில் காட்சிகள்
சேமிக்கப்படுகின்றது
கைத்தெழில் புரட்சி
தேவைக்கதிக உற்பத்திக்கு
இயற்கை அழிக்கின்றது
இருந்தும் பட்டினி
முதலாளிகள்
அறிவாளிகளாக்கப்பட்டு
போடப்படும் எதிர்கால திட்டங்கள்
எண்ணற்ற ஏழைகளை உற்பத்தி செய்கின்றது
இவை வேண்டாம் என்ற
எழுச்சி வருவதற்குள்
இயற்கையே மூச்சடக்கும்
திட்டம் அரங்கேறும்
ப.பார்தீ
06/03/2012
No comments:
Post a Comment