மீண்டும் பூக்கும்
எங்கள் தோட்டம்
அதிர்ச்சியில் வேட்டைக்காரன் கண்கள்
வேலிகள் பயிர்களை
நெருங்கின
காவல்காப்பவன்தான் தோட்டக்காரனென புரியாது
எங்கள் தோட்டத்தில் தேன் எடுக்க
வண்டுககள் மொய்க்கின்றன
இனவிருத்தி தெரியாமல்
எங்கள் மகரந்தம்
பரிமாறப்படுகின்றன
நாங்கள் வேறு தோட்டத்திலும் செடியாவோம்
நாங்கள் அழிவில்லாதவர்கள்
எங்கள் பிறப்பு
அழிவிலிருந்தே வந்தது
நாங்கள் போராளிகள்
ப.பார்தீ
No comments:
Post a Comment