தாய் தந்தை
தங்கை என்றும்
மனைவி பிள்ளை
மக்கள் என்றும்
நேசங் காட்ட விருப்பமில்லை
வானம் பூமி
காற்று என்றும்
நீர் நெருப்பு
அழகு என்றும்
இரசனை கொள்ளத் தெரியவில்லை
காதல் வீரம்
காமம் என்றும்
கோவம் நேசம்
கொள்கை என்றும்
நேர்மை காட்ட தெரியவில்லை
ஆழம் இந்த பூமியிலே
அதிகமான நேர்மையோடு
நேசத்தோடு வந்து உன்னை
பாசத்தோடு பற்றப்போகும்
உண்மை தானே நானுமிங்கே
ப.பார்தீ
No comments:
Post a Comment