Tuesday 6 March 2012
நான் கடவுள்
என்னை சிலுவையில் ஏற்றிய பின்
எனக்காக ஆலயம் கட்டப்பட்டது
தேவதுாதன் என்ற திருநாமம் சூட்டப்பட்டு
தீண்டாமை அரங்கேற்றப்பட்டு
மானிடத்திலிருந்து பிரிக்கப்பட்டது
நான் கடவுலல்ல
என்னை கடவுளாக்கி பொய்யாக்காதீர்
நான் மூட நம்பிக்கையை ஒழிக்க வந்தவன்
ஆறாமறிவை தட்டி எழுப்ப வந்தவன்
எதற்கு என்னுருவத்திற்கு
இத்தனை பெரிய ஆர்ப்பரியம்
நான் உங்களிலொருவன்
பிறக்கும் மானிடத்திற்கு உணவு
வாழ்வில் உயர கல்வி
இறக்கும் தருவாயில் அமைதி
கொடுக்கதவறிய நீங்கள்
வணங்குதல் எனும் பெயரால்
மானுடத்தை அவமதிக்காதீர்
நாளைய சந்ததிக்கு
நல்லறிவுக்கு நாத்திகம் போதியுங்கள்
அதில் நானுங்கள் முதல்ச்சீடன்
ப.பார்தீ
06/03/2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment