மாயக்காதல்
மலர் போல்
மங்கை ஒப்ப
மன்னனும்
மலரை நோக்க
மதியது
மயக்கம் கொள்ள
மலருதே காதல்
அரனதில் இருக்கும்
அரசன்
அவளிடம்
அன்பைச் சொல்ல
அல்லியும்
அறிவைத் துலைக்க
அழிந்ததே பெண்மை
கண்டதும் காதல் கொள்ள
கண்ணனின் லீலை இங்கு
காமனால் ஆட்சி செய்ய
கருவுடன்
கரைதல் ஆனால்
கண்கெட்ட
கன்னி இங்கு
மானத்தை
மாண்பென்றெண்ணும்
மாந்தர்கள் வாழும் பூமி
மாதுவை
மயிரென எண்ண
மாய்த்ததே
மாயக்காதல்
ப.பார்தீ
No comments:
Post a Comment