Saturday 31 December 2011

மாற்றத்துள் சிந்திப்போம்


மாற்றங்களோடு கூடிய
மனித சிந்தனைக்குத் தீர்வு
மரணமே


அழிவினால் வெற்றி கொள்ளும்
உண்மை கூட
எதிர் பார்க்கவில்லை
யார் வாழ்வையும்

சிந்தனை இறக்கையற்ற பறவையாக
எதிர்மறை அறியாதவையாக
ஏக்கங்ஙளோடு பயணிக்கிறாது

விரும்பப்படும் உண்மை
மானிட குணங்கள் மீது
மரியாதையற்ற கோபங்களை
துாண்டி விடுகின்றது

எம் சக்திக்கு அப்பாற் பட்டு
இயங்கும் யாவும்
வணங்ககப்பட  வேண்டியவையல்ல
ஆராயப்பட வேண்டியவை

கண்டுபிடிப்புகள்
காலத்தை சுருக்கின
காலம்
கண்டுபிடிப்பை தந்தது

இணையும் தத்துவங்களோடும்
உண்மையின் நீட்சியோடும்
வாழும் மானிடத்தை
மாற்றத்துள் சிந்திப்போம்
ப.பார்தீ

No comments:

Post a Comment