Saturday 3 December 2011

வாய்களும் சுவைக்குதென்னை


பாய் விரித்து படுக்க எண்ணி
கீழ் நிலத்தை மெழுகவில்லை
பச்சைப் பிள்ளை  படுக்க என்று
முந்தானை விரித்துவிட்டேன்
வீதி உலா வந்த  _காவல்க்காரன்
காமவெறி கொண்டு
கசக்கி விட்டான் காகிதமாய்


பேய் பிசாசு வாழும் ஊரில்,
பேதை மகள் வாழ்க்கை எல்லாம்
சீர்கெட்டுப் போகுது என்று
தாய் உள்ளம் கொண்டவரே !!
தரக் குறைவாய் பேசுகிறார்
வேலியே பயிர் மேய்ந்த கதை
வியப்புமல்ல சகோதரரே

ஓட்டுக்கு ஒட்டடை தட்டி
வீட்டுக்குள் பூட்டுப் பேட்டு
வாழ்ந்த காலம் அன்று
வானத்தை கூரையாக்கி
பூமியையே படுக்கை யாக்கி
வாழ்கையும் போகு திங்கே
வாய்களும் சுவைக்குதென்னை
ப.பார்தீ

No comments:

Post a Comment